×

ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை துணிகர கொள்ளை

கடலூர், ஜன. 18:கடலூர் அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உள்ள உச்சிமேடு பாலாஜி நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் ஜோசப் (53). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி இவர் தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டு, நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.12,000 ரொக்கம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.இது குறித்து ஆல்பர்ட் ஜோசப், ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை துணிகர கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Albert Joseph ,Uchimedu Balaji ,
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...